PUBLISHED ON : ஏப் 27, 2014

அ நிறம் | அளவு
சுவாமி விவேகானந்தர், கேரளாவுக்கு விஜயம் செய்த போது, அங்கு காணப்பட்ட ஜாதி வெறி கண்டு, 'கேரளம் ஒரு ப்ராந்தாலயம்...' (பைத்தியங்களின் புகலிடம்) என்று, கூறினார். சமீபத்தில், குருவாயூர் கோவிலில் நடைபெற்ற சம்பவம், விவேகானந்தர் கூறியதை உண்மையாக்கி உள்ளது.
ஜால்ரா இசைக் கலைஞர் கல்லூர் பாபு; இவர், கோவில்களில் ஜால்ரா வாசிக்க, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கு காரணம் பாபு, தலித் இனத்தை சேர்ந்தவர் என்பது தான். கோவில் விதிமுறைகளை அப்படியே பின்பற்றும் சிறந்த பக்தரான இவருக்கு, தடை ஏற்படுத்தியதை, மக்கள் கண்டித்தனர். கடவுள் முன், அனைவரும் சமம் என்று கூறுவதெல்லாம் பொய்யா!
— ஜோல்னாபையன்.
