PUBLISHED ON : ஜன 22, 2017

முஸ்லிம் பெண்கள் வெளியே நடமாட தயங்கிய காலத்திலேயே, புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து, நடிப்பில் பட்டம் பெற்றவர், கேரளாவைச் சேர்ந்த ஜெமீலா மாலிக். சில மலையாளப்படங்கள் உட்பட, பல்வேறு மொழிகளில், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது, வாடகை வீட்டில், நோயாளி மகனுடன் ஏழ்மையில் வாடுகிறார்.
இதுபற்றி, ஜெமீலா கூறும் போது, 'புனே இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் போது, என் வகுப்புத் தோழி, ஜெயா பாதுரி; அவரை காண அடிக்கடி அமிதாப் வருவார். அப்போது, இருவருடனும் நெருங்கி பழகியுள்ளேன். இன்று கஷ்டப்படும் நிலையில், அவர்களுடனான என் நட்பை புதுப்பிக்க விரும்பவில்லை...' என்று கூறியவர், 'கடந்த, 30 ஆண்டுகளாக நடிப்பு பக்கமே போகவில்லை. கணவரை பிரிந்த நிலையில் தற்போது, சீரியல்களில் நடிக்கிறேன்; வாய்ப்பளித்தால், சினிமாவிலும் நடிக்கத் தயார்...' என்கிறார்.
இவர், ஜெயலலிதா நடித்த கடைசிப் படமான, நதியைத் தேடி வந்த கடல் படத்தில் ஜெயிலராக நடித்துள்ளார்.
-- ஜோல்னாபையன்
