தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - நேர்மை புதைந்த ஆண்மை

கவிதைச்சோலை - நேர்மை புதைந்த ஆண்மை

கவிதைச்சோலை - நேர்மை புதைந்த ஆண்மை


PUBLISHED ON : பிப் 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நான் முள்ளாய்

குத்தினாலும்

முகம் சுளிப்பதில்லை நீ...

* என் அழகுக்கு

தகுதியற்றவன் நீயென

மூக்கை உடைக்கிறேன்...

உண்மையென ஆமோதித்து

என் உச்சி முகர்கிறாய்!

* எனக்கொரு கஷ்டமெனில்

உனக்கு வந்ததாய்

உதடு துடிக்கிறாய்...

உனக்கொரு பிரச்னையெனில்

நடிக்கத்தான் முடிகிறது என்னால்!

* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்

அதை வாங்க

அவசரமாய் யோசிக்கிறாய்...

உன் மீது இடியே விழுந்தாலும்

பதறாமல் நிதானிக்கிறேன் நான்!

* உன் பிறந்த நாளே

என் பிறந்த நாளென்கிறாய்...

காதுக்குள் கவிதை சொல்லியே

கலங்கடிக்கிறாய்!

* உன்னைக் கைப்பிடித்த பிறகே

முற்றுபெற்றேனென்கிறாய்...

என்னைத் தொட்ட அன்று தான்

முழுமையடைந்ததாய் முனகுகிறாய்!

* காதல் நாரெடுத்து

காதில் பூவைத்து

என் தேகம் தீண்டி

விட்டுச் சென்ற அவனெங்கே?

* எல்லாம் தெரிந்திருந்தும்

உள்ளங்கை வெண்ணையாய்

என்னைத் தாங்கும் நீயெங்கே?

* இனியும்

உள்ளக் குறுகுறுப்போடு

மனசாட்சிக்கு துரோகமிழைத்து

என்னால் வாழ முடியாது...

* ஆதலால் தான் சொல்கிறேன்

என் அன்புக் கணவா...

* கொந்தளி...

கோபப்படு...

என்னைக் கொடுமைப்படுத்து...

உன்னை விட்டு விலகி

வெகுதூரம் செல்ல வேண்டும்!

— முத்து நாச்சியா, முத்துப்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us