தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜன 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தை மகள் வருகிறாள் தரணி மணக்க!

* தைமகள் வருகிறாள்

தரணி மணக்க...

வாசல் தெளித்து

வழியெங்கும் கோலமிட்டு

பூக்களால் அலங்கரித்து

புதுமகளை வரவேற்போம்!

* புதுப்பானை வாங்கி

பொன் மஞ்சள் மாலைகட்டி

ஓலை நறுக்குகளால்

உலைப் பொங்கல் பொங்கட்டும்!

எங்கும் மகிழ்ச்சி வெள்ளம்

ஏகாந்தம் கொடுக்க

பச்சரிசி மணக்க

படைப்போம் பொங்கலினை!

* பால் பொங்கும் பரவசத்தில்

பூமி மகிழட்டும்...

செங்கரும்பு காய்கறிகள்

செவ்வாழை கனிகளுடன்

தலைவாழை இலை வைத்து

தை மகளை வரவேற்போம்!

* பொங்குக பொங்கல்...

பொங்கலோ பொங்கல்...

எனும் வாழ்த்தொலி

எத்திசையும் ஒலிக்கட்டும்!

* உழவர் சிறக்கவும்

ஊர் மக்கள் மகிழவும்

தரணி மகிழ்விக்க

தை மகள் வருகிறாள்...

அத்தைமகளின் வரவு

அத்'தை' மகளின் வரவுபோல்

ஆனந்தத்தை

அள்ளி இறைக்கட்டும்!

* கரும்பின் சுவையும்

பொங்கலின் குழைவும்

மஞ்சள் மணமும்

மனித குலம் பெறட்டும்!

* ஏலம் முந்திரி

திராட்சை வெல்லம்

இவையெல்லாம் சேர்ந்து

இனிப்பை கூட்டல் போல்

மனிதர்கள் சேர்ந்து

மனிதத்தின் புகழ்கூட்ட

தை மகள் வருகிறாள்

தரணி மணக்க...

வரும் தை மகளை வணங்கி

தாய்போல் வரவேற்போம்!

வளர்கவி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us