sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 10, 2013

Google News

PUBLISHED ON : மார் 10, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இது வைகையின் கோபம்!

* சிவனுக்காக தலைகுனிந்து

வைகையாய் மாறினேன்...

தவித்தோர் வாய்க்கு

தாகம் தீர்த்தேன் - எனை

தவிக்க விடுகிறீர்களே!

* வற்றாத செல்வமாய்

வாரி வாரி வழங்குகிறேன்

ஆனாலும் என் அருமை

தெ(பு)ரியவில்லையே!

* கண்டதைத் தின்று

காலைக் கடனை கழித்து

கடமையாய் என்னோடு

கலந்து விடுகிறீர்கள்

சட்டென்று பூசிக் கொள்ள

சந்தனமா, ஜவ்வாதா?

* அழுகியதை கொட்டும்போது

அருவருப்பில் மனம் கனக்கிறது!

* கரையெல்லாம் என்மீது

ஆக்கிரமிப்பு செய்கிறீர்கள்

ஆழமாய் என்னை வெட்டி

அங்கஹீனப்படுத்துவதோடு

ஆங்காங்கே சிறுவர்களின்

அகால இறப்புக்கும் ஆளாக்குகிறீர்கள்!

* பொறுத்து பார்த்து விட்டேன்

கழிவுகளின் முடைநாற்றமும்

கயவர்களின் ஆக்கிரமிப்பும்

கட்டுக்கடங்கா கோபம் தருகிறது!

* ஓலமிட்டு ஓலமிட்டு

ஓய்ந்து விடுவேன் ஒருநாள்...

கவலை எனக்கில்லை

கண்டிப்பாக உங்களுக்குத் தான்!

* ஒரு சொட்டு தண்ணீருக்காக

உங்கள் சந்ததி ஏங்கும்...

வருந்தி அழைத்தாலும்

வர மாட்டேன்!

இன்னொரு வைகை

இனிமேல் இல்லை!

எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.






      Dinamalar
      Follow us