sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 31, 2013

Google News

PUBLISHED ON : மார் 31, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதலுக்கு மருந்து போடுகிறேன்!

* காதலே...

உன் வரையறை தான் என்ன?

* மொழிகள் பிறக்கும் முன்

நீ பிறந்ததாலோ என்னவோ

உன்னை வரையறுக்க

எங்களால் முடியவில்லை

இன்று வரை!

* வார்த்தைகளில் வார்த்தெடுத்து

உன்னைச் செதுக்குகிறோம்

ஒவ்வொருவரும் வெவ்வேறு

சிலையாகவே!

* இன்று வரை நீயும்

ஒரு மதமாகவே

விதவிதமான கலாசாரத்தின்

பிரதிபலிப்பாய்

உலகத்து வீதிகளில்

உட்கார்ந்து

விளையாடிக் கொண்டிருக்கிறாய்...

கடவுளும், நீயும்,

வேறில்லை என்பதாலா?

* ஆதாமும், ஏவாளும்

ஆக்கி வடித்த கூட்டாஞ்சோற்றில்

நீ பிறந்திருக்கலாம்...

கையில் ஆப்பிளுடன்

ஹார்ட்டின் வடிவத்தில் - என்பது

எங்கள் ஐதீகம்!

* வள்ளுவன் வடித்தான்...

காதலுக்குள் காமம் என்று

உன்னை வைத்து

ஒரு ஓவியம் படைத்தான்!

* நவீன வாலிபன் உடைத்தான்...

பழைய மரபு

அது எனக்கூறி

காமத்திற்குள் காதல் வைத்து

கலாசாரப் பின்னணியில்

புதுக்காதலைப் படைத்தான்

அதற்கு கடையும் விரித்தான்!

* காவியங்களில் நீயோ

தெளிந்த நீரோடை...

இந்தக் காலத்தில் நீயோ

கலங்கிச் செல்லும்

கழிவு நீரோடை!

* உந்தன் உடை களையப்பட்டு

நீ காயம்பட்டிருப்பது

நிஜம்!

* உண்மை சொல்

காதலே உன் வரையறை

தான் என்ன?

* அடுத்த தலைமுறை

உன்னைத் தீண்டும் முன்

மருந்து போடுகிறேன்!

- த.மலைமன்னன், புனல்வேலி.






      Dinamalar
      Follow us