sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : நவ 17, 2013

Google News

PUBLISHED ON : நவ 17, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்திரம் வரைவது எப்போது?

மனிதா...

வாசிப்பதையே

வாழ்வில்

நேசிப்பதாக கொண்டால், - நீ

காலங்கடந்தும் - பிறரால்

சுவாசிக்கப்படுவாய்!

மனிதா...

உழைப்பதையே

வாழ்வில்

பிழைப்பாக கொண்டால், - நீ

பூமிப்பந்தில் பிறரால்

பூஜிக்கப்படுவாய்!

மனிதா...

அன்பையே

வாழ்வில்

பண்பாகக் கொண்டால், - நீ

அவனியில் - பிறரால்

ஆராதிக்கப்படுவாய்!

மனிதா...

உண்மையையே

வாழ்வில்

தன்மையாக கொண்டால், - நீ

உலகத்தில் - பிறரால்

உற்று நோக்கப்படுவாய்!

மனிதர்களே...

உளி கொண்டு செதுக்க

நீங்கள் ஒன்றும்

ஒன்றுக்கும் உதவா

பாறாங்கற்கள் இல்லை...

உயிருள்ள சிற்பங்கள்!

மனிதர்களே...

சுவர் இருக்கிறது;

சித்திரம்

வரைவது எப்போது?

- சு.பாரதி வீரமுத்து, சிவகங்கை.






      Dinamalar
      Follow us