sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜன 19, 2014

Google News

PUBLISHED ON : ஜன 19, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்க்கை அர்த்தப்படும்!

தனிமரம்

தோப்பாவதில்லை...

ஒரு கை தட்டி

ஓசை எழுவதில்லை!

சொர்க்கம் விண்ணிலில்லை - அது

உறவுகளோடு மனிதன் மண்ணில்

கூடி வாழ்கிற வாழ்வே!

நரகம் வேறில்லை - அது

உறவுகளைத் தொலைத்த

மனித வாழ்வே!

உலகையே மனிதன்

உரிதாக்கிக் கொண்டாலும்

உறவுகள் இல்லையேல்

பயனேதும் இல்லை!

உறவு மலர்கள்

பூத்தாடும் வாழ்க்கை

மணம் வீசும் இன்ப மலர்ச்சோலை!

உறவற்ற வாழ்க்கை

தனிமை, வெறுமை எனும்

துன்ப முள்ளாடும் கொடும்பாலை!

உறவுகளை ஒதுக்கி

வாழ்வதென்ன வாழ்வா...

அவ்விதம் வாழ்வதும் ஒரு

வாழ்வா...

உலகம் என்பது

உறவுகளுக்குள் அடக்கம்!

உறவுகளால் தான்

உலகமது நிலைக்கும்!

உண்மை அன்பிலே

உறவுகள் மெய்ப்படும்

உறவுகளால்தான் மனித

வாழ்க்கை அர்த்தப்படும்!

உறவுகளை நேசிப்போம்

உறவுகளால் நாம்

வாழ்வுதனை வாசிப்போம்!

உறவு மெய்ப்படட்டும்

உலகு மேம்படட்டும்!

— நெப்போலியன்,

மண்ணூர் பேட்டை






      Dinamalar
      Follow us