
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இப்போது........
முல்லைக் கொடிகளை
முறித்துப் போட்டுப்போகும்
பாரிகளின் கார்கள்!
மாபெரும் விருந்துகளில்
மயில் கறி கேட்கும்
பேகன்கள்!
அவ்வையைக் கண்டதும்
அதிசய நெல்லிக்கனியை
ஒளித்து வைக்கும்
அதியமான்கள்!
ஆட்சியை பிடிக்க
தம்பியின் தலை கேட்கும்
குமணர்கள்!
மணியடித்த பசுவிடம்
பேரம் பேசும்
மனுநீதிச் சோழர்கள்!
காரியம் நடக்க
காசு கேட்கும்
காரிகளும், ஓரிகளும்!
சமாதான புறாக்களின்
சதைகளை ருசி பார்க்கும்
சிபி ராஜாக்கள்!
கவச குண்டலங்களை
டாஸ்மாக் கடைகளில் அடகு வைக்கும்
கர்ண வீரர்கள்!
இப்போது...
கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க...
அர்ஜுனன் கீதை சொல்கிறான்!
— இளசை சுந்தரம்,
மதுரை.

