sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : பிப் 21, 2016

Google News

PUBLISHED ON : பிப் 21, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முரண்பாடு!

சுட்டெரிக்கும்

சூரியனை

வசைபாடுகிறோம்

அதுவே அடைமழையில்

வெயில் வந்தால்

வாழ்த்துப் பாடுகிறோம்!

'தரிசு' என்று பெயர் சூட்டி

தள்ளி வைக்கிறோம்

அதுவே

புதையல் இருக்கும்

பூமியாக இருந்தால்

முத்தமிடுகிறோம்!

புயலோடு காற்றடித்தால்

புறம் பேசுகிறோம்

அதுவே இதமான தென்றல் என்றால்

வரவேற்கிறோம்!

ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்தால்

ஆற்றாமையால் கொதிக்கிறோம்

அதுவே அமைதியாக இருந்தால்

தெய்வமாக துதிக்கிறோம்!

துன்பம் வந்தால்

தூற்றுவதும்

இன்பம் வந்தால்

பாராட்டுவதும்

மனித இனத்தின்

மாறாத கோட்பாடு!

இரண்டுமே கலந்திருப்பது

தானே வாழ்க்கை

பிறகென்ன இந்த முரண்பாடு!

வே.விநாயகமூர்த்தி, வெட்டுவான்கேணி.






      Dinamalar
      Follow us