sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 27, 2016

Google News

PUBLISHED ON : மார் 27, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வருத்தம்!

திருமணமானவுடன்

நீ தனிக்குடித்தனம்

போனதற்கு

வருத்தமில்லை மகனே!

கடன் வாங்கி

வீடும், காரும், 'ஏசி'யும்

வாங்குவதற்கு

வருத்தமில்லை மகனே!

பாதி நாட்கள்

வீட்டில் சமைக்காமல்

உணவு விடுதிகளில் செலவழிப்பதற்கு

வருத்தமில்லை மகனே!

பேரனுக்கு பேர் வைக்கக் கூட

ஒரு வார்த்தை கேட்காதது

ஆலோசிக்காதது

வருத்தமில்லை மகனே!

உன் வரவு, செலவு

திட்டங்கள் எதையும்

சொல்லாததற்குக் கூட

வருத்தமில்லை மகனே!

பிள்ளைகளை கண்டிக்காமல்

அடிக்காமல், செல்லமாக

வளர்ப்பதற்குக் கூட

வருத்தமில்லை மகனே!

தும்மினால் கூட

பாட்டி வைத்தியம் கேட்காமல்

டாக்டரிடம் போய் செலவழிப்பதற்கு

வருத்தமில்லை மகனே...

உனக்கு இன்று வரை

அதிகம் சுதந்திரம், உரிமை

கொடுத்து வளர்த்து விட்டதற்குக் கூட

வருத்தமில்லை மகனே...

காரணம்...

என் அப்பா

என் மீது கொண்ட வருத்தம்

இதை விடப் பெரியது!

'சொல்கேளான்' ஏ.வி.கிரி, சென்னை.






      Dinamalar
      Follow us