தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : டிச 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கை ஒன்றுதான்!

உலை அரிசிக்கு தெரிவதில்லை - அது

உருமாறி பலரின் பசியாற்றப் போவது!

ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை - அது

அரைபட்டு பின் அடுப்புக்கு போவது!

அட்சதை அரிசிக்கு தெரிவதில்லை - அது

மங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது!

வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை - அது

சந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்கு போவது!

ரேஷன் அரிசிக்கு தெரிவதில்லை - அது

ஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் போவது!

அரிசி ஒன்று தான் - ஆனால்,

பயன் வேறு வேறு!

வாழ்க்கை ஒன்று தான் - அது

வாழ்பவனையும், வாழும் விதத்தையும் பொறுத்தது!

எஸ்.ஆர்.சாந்தி, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us