sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : டிச 02, 2018

Google News

PUBLISHED ON : டிச 02, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்வு மலரும்!

உதிக்கும் கதிரவன் அழகையும்

மறையும் சூரியன் எழிலையும்

ரசித்துப் பழகணும்!

பெய்யும் மழையையும்

சன்ன இழையாய் விழும்

மழை நீரையும்

கண்டு களிக்கணும்!

மலர்களின் நறுமணத்தை

நுகர்ந்து மகிழணும்

கனிகளின் சுவையை

சுவைத்து நெகிழணும்!

வண்ணப் பூச்சிகளின்

வசீகர நிறங்களை

சிலாகித்து சொல்லணும்!

குளிர்ந்த தென்றலையும்

மார்கழி பனி காற்றையும்

இதமாய் அனுபவிக்கணும்!

இயற்கை சூழலை

இன்பமாய் ஆனந்திக்கணும்

பறவைகளின் குரலை

செவிமடுத்து மகிழணும்!

மின்னும் தாரகைகளையும்

விண்ணில் தவழும் நிலவையும்

திரண்டு ஓடும் மேகங்களையும்

பார்த்து ரசிக்கணும்!

ஆர்ப்பரிக்கும் கடலலைகளையும்

பொங்கும் ஆற்று நீரையும்

கொட்டும் அருவிகளையும்

நின்று கவனிக்கணும்!

இயற்கை நமக்காக

கொடையாய் அளிக்கும்

ஆனந்த உன்னதங்களையும்

சுவீகரித்து பழகணும்!

அதனால், நம்முள்ளே

அமைதி கிடைக்கும்

உள்ளம் தெளிவுறும்

சந்தோஷம் பொங்கும்

வாழ்வு மலரும்!

சாய், மதுரை.






      Dinamalar
      Follow us