sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மே 19, 2019

Google News

PUBLISHED ON : மே 19, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரிதினும் பெரிது கேள்!

அயர்ந்த துாக்கத்திலும்

அரை கண் விழித்திரு

வரம் தரும் தேவதைகள்

வந்து வாசல் தட்டலாம்!

கால் ஆட்டியபடியே

கண்ணயர்ந்து துாங்கு

எழுந்து கொள்ளும்

எச்சரிக்கையோடு இருப்பதாக

புறப்பட்டு வந்த தேவதை

புரிந்து கொள்ளட்டும்!

வரும் தேவதைக்கு தேவை

வணக்கம் அல்ல

இணக்கம்!

கைகள் பற்றி

கண்ணியமாய் கேள்

உன் தகுதியை தள்ளி வை

உன்னை நீயே குறைத்து மதிப்பிடாதே!

என்ன வரம் வேண்டும்

என்று கேட்டால்

கேள்... பெரிதினும் பெரிது கேள்!

கேட்கப்படாததால்

பல தேவதைகள், கஜானாக்களை

காலியாக்காமலேயே

திரும்பியிருக்கின்றன!

வரம் கேட்போர்

வரிசையில் காத்திருக்கின்றனர்

வரம் தரும் தேவதையிடம்

கேட்க வேண்டியது

வரம் அல்ல!

கேள்... பெரிதினும் பெரிது கேள்!

எதையும் தர

தயாராய் இருக்கும் தேவதையிடம்

'கஜானாவோடு தேவதையாவது'

எப்படி என்னும் ரகசியத்தை கேள்

அதை ரகசியமாய் அல்ல

ஊர் அறிய கேள்

உன்னை பிறர் அறிய கேள்

ரவுத்திரத்தோடு கேள்

ஏனெனில்,

நீ போராடும் இடம் போர்க்களம் அல்ல

வாழ்க்கை!

வே.புவனா, குன்னுார்.






      Dinamalar
      Follow us