தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை

கவிதைச்சோலை

கவிதைச்சோலை


PUBLISHED ON : மே 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவளை பார்த்த ஞாபகத்தில்...

* அவளைப் பார்த்த அந்த நொடி

உயிரில் ஜீவநதி உருண்டோடி

உயிர் மலரக் கண்டேன்!

* ஊரே தூங்கும் போது...

இமை மூடாதிருந்தேன்...

உள்ளத்தில் அவளை வைத்து

உலகத்தை மறந்து போனேன்,

அவளை பார்த்த ஞாபகத்தில்!

* வெள்ளை அணு, சிவப்பணு

சண்டையிட்டு காதலாகி

காதலின் காலடியில்

கண்கள் பூத்து நின்றேன்,

அவளை பார்த்த ஞாபகத்தில்...

* தனிமை உணர்வுகளை ரசித்து,

தனியே பேசி சிரித்து,

வெட்கம் மறந்து,

வினாடிக்குள் கரைந்து போனேன்,

அவளை பார்த்த ஞாபகத்தில்!

* மின்னல்கள் கூத்தாடி

கண்கள் கொய்து போனாள் -அந்த

பூகம்ப அலைகளில்

புன்னகை மறந்து போனேன்,

அவளை பார்த்த ஞாபகத்தில்!

* இரவில் கதிரவனையும்,

பகலில் நிலவையும் தேடும்

விசித்திரமான வியாதிக்குள்

வீழ்ந்து கிடந்தேன்,

அவளை பார்த்த ஞாபகத்தில்!

* கிறுக்கல்கள் கவிதையென

உணர்ந்தேன்...

கிழக்கு வெளுக்கும் முன்

விழித்தெழுந்தேன்,

அவளை பார்த்த ஞாபகத்தில்!

* தாயின் கருவறைக்குள்

ஈரைந்து மாதம் இருந்த

இன்பம் போல் இருந்தது,

அவளை பார்த்த அந்த நொடி!

* உயிரின் ஈரம்

உலர்ந்து போகுமுன்

மீண்டும் ஒரு முறை

பார்ப்பேனா அவளை!

* அவள் நினைவுகளே

வாழ்க்கை என்றான பிறகு,

அவள் தொடும் தூரத்தில்

இருந்தாலென்ன...

தொலை தூரத்தில் இருந்தாலென்ன!

— க.மோகன், அறந்தாங்கி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us