
இதுவே வாழ்க்கை!
சில காயங்கள் மருந்தால் சரியாகும்
சில காயங்கள் மறந்தால் சரியாகும்!
வறுமை வந்தால் வாடக் கூடாது
வசதி வந்தால் ஆடக் கூடாது!
வியர்வை துளிகள் உப்பாக இருக்கலாம்
ஆனால், அவை வாழ்க்கையை
இனிப்பாக மாற்றும்!
வீரன் சாவதில்லை
கோழை வாழ்வதே இல்லை!
உன்னை நீ செதுக்கிக் கொண்டே இரு
வெற்றி பெற்றால் சிலை
தோல்வி அடைந்தால் சிற்பி!
மனிதனுக்கு, 'ஏபிசிடி' தெரியும்
ஆனா, 'கியூ'ல போக தெரியாது
எறும்புகளுக்கு, 'ஏபிசிடி' தெரியாது
ஆனா, 'கியூ'ல போக தெரியும்!
உண்மை எப்போதும்
சுருக்கமாக பேசப்படுகிறது
பொய் எப்போதும்
விரிவாக பேசப்படுகிறது!
பேசிப் பேசியே நம்மை ஏமாற்றுகின்றனர்
என்பதெல்லாம் பொய்!
அவர்கள் பேச்சில்,
நாம் ஏமாந்து விடுகிறோம்
என்பதே உண்மை!
குறைகளை தன்னிடம்
தேடுபவன் தெளிவடைகிறான்
குறைகளை பிறரிடம்
தேடுபவன் களங்கப்படுகிறான்!
கடனாக இருந்தாலும் சரி
அன்பாக இருந்தாலும் சரி
திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு!
உறவினர்களில் யார் முக்கியம் என்பதை
உயிரற்ற பணமே முடிவு செய்கிறது!
பணம் கொடுத்து பார்
உறவுகள் உன்னை போற்றும்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப் பார்
மண்ணை வாரி துாற்றும்!
அறுந்து போன செருப்புக்கு கூட
வீட்டில் ஒரு இடம் உண்டு
இறந்து போன மனித உடலுக்கு
வீட்டில் ஒரு இடமும் இல்லை!
இது தான் உண்மை
இதுவே வாழ்க்கை!
எம். அசோக்ராஜா, திருச்சி.

