sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூன் 05, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2011


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்னிப்பு!

* உன்னைக் கரம் பற்றிய

நாள் முதலாய்

என் வாழ்க்கைத் தரம்

உயர்ந்தது!

* கண் போல் என்னையும்,

பிள்ளைகளையும்

காக்கிறாய்...

அன்பால் அனைவரையும்

ஈர்க்கிறாய்!

* முகமறிந்து நடக்கிறாய்...

தும்மல் வந்தாலும்

துடிக்கிறாய்...

துவளும் போது

தோள் கொடுக்கிறாய்!

* பசி வந்து பார்த்ததில்லை

அழுக்காடை அணிந்ததில்லை

நோய் வந்து துடித்ததில்லை

தாய் மனம் கோணியதில்லை!

* பேரன் - பேத்தி

எடுத்த பின்னும்

கத்துவதையும்,

உன்னைத் திட்டுவதையும்

விடாத என்னிடம்...

* மந்திரியாய், நண்பனாய்

ஆசானாய், தாதியாய்

இன்றளவும் நம் இல்லறத்தில்

இனிமை சேர்க்கிறாய்!

* இதுவரை, ஒரு நாள் கூட

உன்னைப் பாராட்டியதில்லை

போற்றியதில்லை, புகழ்ந்ததில்லை...

மதித்ததில்லை, வாழ்த்தியதில்லை!

* எல்லாவற்றிற்கும் சேர்த்து

உன்னிடம் மன்னிப்புக்

கேட்டுக் கொள்கிறேன்...

உன் காலைத் தொட்டு

நீ தூங்கும் போது...

உனக்குத் தெரியாமல்!

— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us