sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை

/

கவிதைச்சோலை

கவிதைச்சோலை

கவிதைச்சோலை


PUBLISHED ON : செப் 18, 2011

Google News

PUBLISHED ON : செப் 18, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரிவு!

* நீ எதைத் தந்தாலும்

மறுக்காமல்

வாங்கிக் கொள்வேன்...

ஆனால், இப்போது

பிரிவைத் தருகிறாய்...

எங்ஙனம்

தாங்கிக் கொள்வேன்!

* உன்னையும்,

நம் காதலையும்

எழுதிக் கொண்டிருந்த

என் பேனாவிற்குக் கூட

நம் பிரிவை எழுதும் போது

கொஞ்சம்

வலிக்கத்தான் செய்கிறது!

* இதயத்தில் உதித்த

உன் நினைவுகள்

சூரியனல்ல...

மேற்கில்

மறைந்து போவதற்கு!

* என் இதயத்தை

அரித்துக் கொண்டிருக்கும்

உன் நினைவுகள்

கரையான்களை விட

பயங்கரமானவை!

* ரிப்பனை வெட்டிவிட்டு

புதிய கடைக்குள்

நுழைவது மாதிரி,

என்னை வெட்டி விட்டு

புதிய வாழ்க்கைக்குள்

நீயோ நுழைந்து விட்டாய்!

* என்னைப் பற்றிய

கரைகள் ஏதேனும்

உன் வீட்டிலோ,

உன் இதயத்திலோ

இருந்தால் தயவு செய்து

சுத்தப்படுத்தி விடு!

* பூங்காவில்

சிரித்துக் கொண்டிருக்கும்

பிற காதலர்களின்

சிரிப்பாவது - இனி

காப்பாற்றப்படட்டும்!

* பிடிவாதக்காரியென்பது

சரியாகத்தானிருக்கிறது

இறங்க மறுக்கிறாயே - என்

இதயத்தை விட்டு!

* எனக்கு

நினைவு தெரிந்த

நாளிலிருந்து இப்போது தான்

முதன் முறையாய்

அழுகிறேன்...

காதல் தோல்வியால்!

* நான் ஒவ்வொரு முறையும்

தற்கொலை

செய்து கொள்ள

விரும்புகிற போதெல்லாம்

எப்படியாவது அது

தடைப்பட்டு போகிறது!

* புரிந்து கொண்டேன்

இனியவளே...

நீ வெறுத்த

இந்த உயிரை

மரணமும் வெறுக்கிறது!

— ஆர்.நாகராஜன், திருமங்கலம்.






      Dinamalar
      Follow us