தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை

கவிதைச்சோலை

கவிதைச்சோலை


PUBLISHED ON : செப் 18, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரிவு!

* நீ எதைத் தந்தாலும்

மறுக்காமல்

வாங்கிக் கொள்வேன்...

ஆனால், இப்போது

பிரிவைத் தருகிறாய்...

எங்ஙனம்

தாங்கிக் கொள்வேன்!

* உன்னையும்,

நம் காதலையும்

எழுதிக் கொண்டிருந்த

என் பேனாவிற்குக் கூட

நம் பிரிவை எழுதும் போது

கொஞ்சம்

வலிக்கத்தான் செய்கிறது!

* இதயத்தில் உதித்த

உன் நினைவுகள்

சூரியனல்ல...

மேற்கில்

மறைந்து போவதற்கு!

* என் இதயத்தை

அரித்துக் கொண்டிருக்கும்

உன் நினைவுகள்

கரையான்களை விட

பயங்கரமானவை!

* ரிப்பனை வெட்டிவிட்டு

புதிய கடைக்குள்

நுழைவது மாதிரி,

என்னை வெட்டி விட்டு

புதிய வாழ்க்கைக்குள்

நீயோ நுழைந்து விட்டாய்!

* என்னைப் பற்றிய

கரைகள் ஏதேனும்

உன் வீட்டிலோ,

உன் இதயத்திலோ

இருந்தால் தயவு செய்து

சுத்தப்படுத்தி விடு!

* பூங்காவில்

சிரித்துக் கொண்டிருக்கும்

பிற காதலர்களின்

சிரிப்பாவது - இனி

காப்பாற்றப்படட்டும்!

* பிடிவாதக்காரியென்பது

சரியாகத்தானிருக்கிறது

இறங்க மறுக்கிறாயே - என்

இதயத்தை விட்டு!

* எனக்கு

நினைவு தெரிந்த

நாளிலிருந்து இப்போது தான்

முதன் முறையாய்

அழுகிறேன்...

காதல் தோல்வியால்!

* நான் ஒவ்வொரு முறையும்

தற்கொலை

செய்து கொள்ள

விரும்புகிற போதெல்லாம்

எப்படியாவது அது

தடைப்பட்டு போகிறது!

* புரிந்து கொண்டேன்

இனியவளே...

நீ வெறுத்த

இந்த உயிரை

மரணமும் வெறுக்கிறது!

— ஆர்.நாகராஜன், திருமங்கலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us