sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை

/

கவிதைச்சோலை

கவிதைச்சோலை

கவிதைச்சோலை


PUBLISHED ON : அக் 16, 2011

Google News

PUBLISHED ON : அக் 16, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாங்கள்...

* தீவிரவாத வெடிகுண்டுகள்

கர்ஜித்துப் பாய்ந்தாலும்

எங்கள் அமைதிப் புறாக்களுக்கு

சேதமில்லை!

* மதப் பிரிவினை நரிகள்

ஊர்களுக்குள் உலவினாலும்

எங்கள் ஒற்றுமை மான்களுக்கு

பாதகமில்லை!

* ஜாதி வெறிப் பேய்கள்

கூட்டம், கூட்டமாய் அலைந்தாலும்

எங்கள் மனிதநேய யானைகள்

சிதிலப்படுவதில்லை!

* இயற்கை சீற்றப் பாம்புகள்

மூர்க்கமாய் தீண்டினாலும்

எங்கள் கம்பீரச் சிங்கத்திற்கு

பங்கமில்லை!

* எல்லைப் பிரச்னைக் கற்கள்

பாதைகள் நிரம்ப இருந்தாலும்

எங்கள் வேகக் குதிரைகள்

சோர்வதில்லை!

* ஊழல் தேள்கள்

மாறி, மாறி கொட்டினாலும்

எங்கள் உயர்வு ஒட்டகச்சிவிங்கிகள்

தாழ்வதில்லை!

* நெரிசல்களூடே

இருந்தாலும்

எங்கள் நிம்மதி முயல்கள்

நசுங்குவதில்லை!

* ஏற்றத்தாழ்வு நெருப்பு விழுந்தாலும்

எங்கள் சாதனை நெருப்புக் கோழிகள்

பொசுங்குவதில்லை!

* நாங்கள் உலகின் வியப்பு

நாங்கள் உலகின் அவசியம்

நாங்கள்

இருநூற்று நாற்பது கோடி

கால் மண்டபம்...

இருநூற்று நாற்பது கோடி கரங்கள்

கொண்ட விருட்சம்...

நூற்றிருபது கோடி மூளைகள் கொண்ட

அறிவுக் களஞ்சியம்...

நாங்கள் இந்தியர்களாய்ப் பிறந்த

புண்ணியஸ்தர்கள்!

— வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.






      Dinamalar
      Follow us