தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்ன சொல்லப் போகிறாய்?

* விழியில்

ஆயிரம் கவிதைகள்

சொல்கிறாய்...

அருகில் வந்தால்

அலைக்கழிக்க விடுகிறாய்!

* எனக்கான

உன் தடயங்கள்,

என் இதயத்தை

புரட்டிப் போட்ட

பாதைகள்!

* நீயறிந்திட

நான் சொன்ன காதலை - ஏனோ

உனக்குள்ளே

மறைத்து விட்டாய்!

* நீயறிந்திடாததைப் போல

நீ நடந்து கொள்ளும் போது

என் காதலெங்கும் தீயில்

எரிந்திடுகிறது!

* வானத்துக்குள்

நிலவாய் நீ

ஜொலித்துக் கொண்டிருக்க,

உன் வீட்டு செடியில்

பூக்களாய்

என்னை காத்திட வைக்கிறாய்!

* காற்றாய் நீ சுற்றி வர

கண்டு கொள்ளாமல்

நானிருந்தது குற்றம் தான் -

அதற்காகவே

தென்றலாய் நான் வர

புயலாய் நீ போகாதே!

* அன்புப் பார்வையை

எறிந்து விட்டு

ஏன் அதிகாரப் பார்வையில்

ஆட்சி செய்கிறாய்!

* என் அன்பே...

உனக்கும், எனக்கும்

தினந்தோறும் நிகழ்வது

காதல் யுத்தமா...

அல்லது

காம யுத்தமா...

நீயே சொல்லி விடு...

இல்லையெனில்

உன் நினைவில்லாத

உலகில் என்னை

வாழவிடு!

வீ.சிவசங்கர், கள்ளக்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us