தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதை - கவிஞன்

கவிதை - கவிஞன்

கவிதை - கவிஞன்


PUBLISHED ON : ஜன 30, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 30, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பொய்யெனும் கற்பனைக்குப்

பூவைத்து அழகு பார்ப்பவன் கவிஞன்...

உண்மைகளைக் கூர் தீட்டி

குறிவைத்து வீசுபவனும் அவன்தான்!

* கோடி பணம் கொடுத்தாலும்

விஷ விருட்சங்களுக்கு

வேர்களாக மாட்டான்...

அவன் —

பாதையோர வேலியில்

படரும் பூங்கொடி போல்

சுதந்திரம் பழகியவன்!

* கவிஞன் —

வார்த்தைகளை வசப்படுத்திக் கொண்டு

சிந்தனை உளியால்

சிற்பம் செதுக்குவான்...

தனிமை தவமிருந்து

இனிமை கவிதைகளை ஈன்றெடுப்பான்...

சின்னச் சின்ன அழகைக் கூட

அவன் விழிகள் வீணாக்காது!

* இன்பம் துன்பம் எனும்

இரட்டைச் சிறகணிந்து

விண்ணில் உலாவரும்

வீரியப் பறவை அவன்!

* சமுதாயக் கேடுகளையும்,

பண்பாட்டுப் பழுதுகளையும்

அவனது எழுதுகோல்

எடுத்துக் காட்டியே தீரும்!

* அன்னை மொழியையும்,

பிஞ்சு கால் பதிந்த மண்ணையும்

அவன் கடைசி வரை காதலிப்பான்!

* கவிஞனுக்கு

வினாக்குறியாய் வளையத் தெரியாது...

வியப்புக்குறி போல் நிமிர மட்டுமே தெரியும்!

* கவிஞன் என்பவன்

விழிகளுக்கு விருந்தாளி;

மொழிகளுக்கு முதலாளி!

— நா.பெரியசாமி, காட்டுக்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us