தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிச்சோலை

கவிச்சோலை

கவிச்சோலை


PUBLISHED ON : பிப் 13, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதய குளத்தில் காதல் கல்லெறிந்து...

* என் பார்வை

அம்பு பட்டு

காயம் பட்டதென்னவோ

உன் இதயமாக

இருக்கலாம்...

ஆனால், வலி

எனக்குள்ளே!

* எட்டாக்கனி நீயென்பதால்

உன்னை மறக்க

நினைத்து, நினைத்தே

தினம் உன்னையே

நினைத்து கொண்டிருக்கிறேன்...

மறந்து போனேன்

உன்னை மறப்பது

எப்படியென்று!

* என் அப்பாவின்

நினைவு நாளன்று

கண்ணீர் கூட

வர மறுத்து விட்டது...

ஏன் தெரியுமா?

உப்பு நீர்

உன்னை உறுத்துமென்று!

* என் காதலை

ஏற்காமல்

காலம் தாழ்த்துவதேனோ?

என்னை

கவிஞனாக்கிடவா...

உனக்கு தெரியுமா?

உன்னை முதன்முதல்

பார்த்தபோதே

நான் ரசிகனாய்,

கலைஞனாய், கவிஞனாய்

மாறிப்போனேனென்று!

* என்னுடல்

இளைத்து விட்டது

என்கின்றனர்

உறவினர்கள்...

உன்னால் தானே

இரவு பகலாவும்,

பகல் இரவாகவும்

என்னுள் வானிலை

மாற்றம் நிகழ்ந்தது!

அதற்கு ஈடுகொடுக்க

முடியாத உடல்

இளைக்காமல்

என்ன செய்யும்?

* உன் இதயக் குளத்தில்

காதல்

கல்லெறிந்துவிட்டு

நான் கலங்கி கொண்டிருக்கிறேன்...

நீயோ,

தெளிவாகவே இருக்கிறாய்

மரபு வேலிக்குள்!

— தே.பழனி, ராட்டினமங்கலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us