sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 05, 2026 ,சித்திரை 22, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிச்சோலை!

/

கவிச்சோலை!

கவிச்சோலை!

கவிச்சோலை!


PUBLISHED ON : ஏப் 03, 2011

Google News

PUBLISHED ON : ஏப் 03, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்கையோடு இயைந்த வாழ்வு இதுதானா?

* இருண்டு கிடந்த சமூகத்தின்

விடியல் கண்டான்...

சின்னச் சின்ன ஆசைகளில்

சிம்மாசனமிட்டான்!

* கல்லை சிற்பமாக்கினான்...

மின்னலை கைது செய்து

மின்சாரம் கண்டான்!

* நிர்வாணத்திற்கு விடை கொடுத்து

தாவரங்களுக்குள்

ஒளிச்சேர்க்கை செய்யும்

உத்தி கண்டான்!

* கண்ணீர் சந்தோஷத்தின்

சமிக்ஞையை தரிசித்து

மனிதனின் மகத்துவத்தை

பதிவு செய்தான்!

* சூரியன் தடுக்கி விழுகையில்

சிந்தித்தான்...

சிந்தித்ததெல்லாம்

சித்திரமாக்கினான்!

* இயற்கையின்

முதுகில் சவாரி செய்து

கணினி மயமாக்கினான்!

* ஆனால் —

பூமியின் தோளில் வெயில் போர்த்தி

பகலின் மடியில் வெப்பச் சலனம்

அந்தி ஓய்வெடுத்தாலும்

அடங்கவில்லை அனல்காற்று!

* பூமியின் அக்னி கதவு

திறந்து கொண்டதால்

பிரபஞ்ச நுரையீரல்

சொந்த மூக்கில் சுவாசிக்கிறது!

* கடலின் சுவாசப்பை அடங்கி

காற்று ஓய்வெடுக்க சென்றதால்

பற்றி எரிகிறது பனிமலை!

* அனல் சொட்டச் சொட்ட

அக்னி மழையை

அள்ளித் தெளிக்கிறது இயற்கை...

நீரின்றி காய்கிறது தேசம்!

* கார்போ-ஹைடிரேட் புகை

காற்று மண்டலத்தை அடைத்து

வேனில் காற்று வீசி

வியர்வை நரம்பு அறுக்கிறது!

* வெப்பச் சலனம்

மழைக்காலம் பொய்த்து போய்

பூமி ரத்தகளமாகி

வாழ்வின் சாவுக்கு

வழி வகுத்து விட்டது

இயற்கை அழிந்து!

* காணி நிலம் கூட இல்லை

மயிற்கூச்சங்களாய்

வளர்ந்து நிற்கிறது கட்டடங்கள்!

* ஏரிகள், குளங்களெல்லாம்

தொழிற்சாலை...

தண்ணீரில் ரசாயன கலவை...

வாழ்வியல் முழுவதும்

வைரஸ் கிருமிகள்!

* இயற்கையை வென்று விட்டதாய்

ஆர்ப்பரிக்கிறான்...

மருந்தை உணவாக

உட்கொள்வது தெரியாமல்!

* இயற்கையின் பேரழிவுக்கு

மனிதன் எடுத்த ஆயுதம்

விஞ்ஞான வளர்ச்சி!

* விஞ்ஞானத்தை கொண்டு

இயற்கையை

வளர்க்க முடியுமா?

* பருவநிலை மாற்றங்களால்

கவலையுற்ற பூமாதேவி...

அயர்ந்து கண்ணுறங்குகிறாள்...

இயற்கையோடு இயைந்த வாழ்வு

இதுதானாவென்று!

-க. மோகன், அறந்தாங்கி






      Dinamalar
      Follow us