PUBLISHED ON : அக் 11, 2015

அ நிறம் | அளவு
'பிரிட்டனை, அதிக ஆண்டுகள் ஆட்சி செய்து வரும் ராணி' என்ற மிகப் பெரிய கவுரவத்திற்கு சொந்தக்காரராகி உள்ளார், ராணி இரண்டாம் எலிசபெத். இதற்கு முன், இவரின் பாட்டி, விக்டோரியா மகாராணிக்கு இந்த கவுரவம் கிடைத்தது. இவர், 63 ஆண்டுகளுக்கு மேல், பிரிட்டனை ஆட்சி செய்த பெருமையை பெற்றிருந்தார். இச்சாதனையை முறியடித்து, அப்பெயரை தனக்கு சொந்தமாக்கியுள்ளார் எலிசபெத். தன், 25வது வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற எலிசபெத் ஆட்சி காலத்தில், 12 பேர், பிரிட்டனின் பிரதமர்களாக பதவி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
— ஜோல்னா பையன்.
