PUBLISHED ON : மார் 07, 2021

அ நிறம் | அளவு
மகா சிவராத்திரி என்பதற்கு, மங்களகரமான இரவு நேரம் என்று பொருள். ஒருசமயம், உலகமே ஈசனுக்குள் ஒடுங்கியது.
அப்போது, விரதம் இருந்து, சிவபூஜை செய்து, இந்த உலகம் மீண்டும் தோன்றி அனைத்து ஜீவராசிகளும் வாழ வேண்டும் என்று, கேட்டுக் கொண்டாள், உமாதேவி; சிவனும் இரங்கினார். அப்படி உமாதேவி போற்றி துதித்த நாள் தான், மகா சிவராத்திரி.
அபிஷேகம்!
சிவபெருமானுக்கு அகில், சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனை, ஜவ்வாது மற்றும் புனுகு இவற்றால் அபிஷேகம் செய்வது சிறப்பு.
