PUBLISHED ON : மே 22, 2022

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில், டாட்டா நிறுவன தலைமையகம் அமைந்திருக்கும் கட்டடத்தின் பெயர், 'பாம்பே ஹவுஸ்!' இதனுள் தான், டாட்டா நிறுவனர், ரத்தன் டாட்டாவின் குடியிருப்பும், அலுவலகமும் இருக்கிறது.
இந்த குடியிருப்பு வளாகத்தினுள், ஏராளமான தெரு நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கும். ரத்தன் வீட்டு சொகுசு இருக்கைகளில் கூட, படு சுதந்திரமாக அமர்ந்து நாய்கள், 'போஸ்' கொடுப் பதைப் பார்க்கலாம்.
பொதுவாக, செல்வந்தர்கள், விலை உயர்ந்த ஜாதி நாய்களையோ அல்லது வெளிநாட்டு நாய்களையோ தான் வளர்ப்பர். ஆனால், ரத்தன் டாட்டாவுக்கு தெரு நாய்கள் மீதுதான் விருப்பம் அதிகம்.
காரில் செல்லும்போது, தெருவில் ஏதாவது நாய் சுற்றி திரிவதைப் பார்த்தால், உடனே, அதை தன் காரில் ஏற்றி, வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்.
அவர் அருகில் இடம்பிடிக்க, நாய்களுக்குள் போட்டா போட்டியும் நடக்கிறது.
ஜோல்னாபையன்
