தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முதல் யானை பாகி(கன்)!

முதல் யானை பாகி(கன்)!

முதல் யானை பாகி(கன்)!


PUBLISHED ON : மே 15, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்தில் உள்ளவர் பெயர், சுலேகா பீவி. கேரள மாநிலம், கொல்லம் அச்சன்கோவிலை சேர்ந்தவர். இவருக்கு, 27 வயதானதும், இஸ்மாயில் என்ற யானை பாகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

யானையுடன் தோழமையாக, தன் கணவர் பழகுவதை பார்த்ததும், இவருக்கும், யானை பாகி ஆகும் ஆசை வந்தது.

தன் ஆசையை கணவரிடம் சொல்ல, அவரும் உற்சாகப்படுத்தினார். அக்கம்பக்கத்தினர் கேலி செய்த போதும், தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை, சுலேகா.

கணவரிடமிருந்து, யானைகளை பராமரிக்கும், பழக்கும் முறைகளை கற்றுக்கொண்டார். யானைகளும், இவரை, தன் எஜமானியாக ஏற்றுக்கொண்டன.

யானை மீது அமர்ந்து, பாகன்கள் செல்லும் நிலையில், யானையின் காது அல்லது தந்தத்தை பிடித்தபடி நடந்து செல்வார், சுலேகா.

இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், நாட்டின் முதல் யானை பாகி, இவர் தான்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us