PUBLISHED ON : நவ 15, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆப்ரிக்க நாடான, கென்யாவின் கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தவர் தான், 'மசாயி!' மாடுகளை வளர்த்து, அதன் வருவாயில் வாழும் இவர்களை, 'நெமாடிக் வாரியர் ட்ரைப்' என்று அழைக்கின்றனர்.
நாகரிக உலகிலும், தங்களது பாரம்பரிய உடைகளை மட்டுமே உடுத்தி, அசத்துகின்றனர். இவர்களுக்கு மின்சார வசதி சரிவர இல்லாதபோதும், மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். மண்ணுடன் சாணியை கலந்து, சிறிய வீடுகளை கட்டுகின்றனர். இந்த வீடுகளை, 'மான்யூட்டா' என்று அழைக்கின்றனர். இவர்களுக்குள் குற்றச் செயல்களே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது.
— ஜோல்னாபையன்

