sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: எட்டாவது அதிசயம்!

கவிதைச்சோலை: எட்டாவது அதிசயம்!

கவிதைச்சோலை: எட்டாவது அதிசயம்!


PUBLISHED ON : மார் 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 30, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்ரல் 01 - முட்டாள்கள் தினம்!

முட்டாள் தினத்தை இதுவரை

சொந்தம் கொண்டாடி யாரும்

சுய விருப்பம் காட்டியதில்லை

ஆனாலும், உலகில்

உயர்ந்த வரலாறு படைத்து

வெற்றிக் கொடி நாட்டி வருகிறது!

பூரண புத்திசாலி எனும்

பெரும் பெருமை

மானுடப் படைப்பில் இல்லை

அதிபுத்திசாலிக்கும் இங்கே

அங்குல அளவேனும்

அடி முட்டாள்தனம் உண்டு!

முட்டாள் என்று உணரும் போதே

மனிதன் புத்திசாலி ஆகிறான்...

பிறரை முட்டாளாக்க

முயலும் போது அவன்

அடி முட்டாளாகிறான்!

 அனைத்தும் ஒன்றென்ற அத்வைத பார்வையில்

அறிவாளிக்கும், அடி முட்டாள்களுக்கும்

அர்த்தமே இல்லை என்பது

ஆன்மிக ஞானத்தின் ஆச்சரியம்!

அன்றாட வாழ்வில்

அறிவுக்கும், அன்புக்கும்

அந்நிய துாரம்...

அறிவியல் விதியில்

முட்டாள்தனத்துக்கும்

முழுமையான அன்புக்கும்

இடைவெளியே இல்லா நெருக்கம்!

ஏமாற்றுவதும்

ஏமாற்றப்படுவதும்

இன்ப சுரபியாய் இயங்குவது

உலகின் எட்டாவது அதிசயமல்லவா?

ஆகவே நண்பர்களேஏப்ரல் முதல் நாளன்று

ஏமாந்தால் அது

அவமானம் இல்லை - அது

ஆகாய உயரத்துக்கு

உயர்ந்து நிற்கும் அன்பின் முத்திரை!

எஸ்.ஆர்.யுகேஷ், விருதுநகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us