/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!
/
கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!
PUBLISHED ON : ஏப் 27, 2025

மே 1 - உழைப்பாளர் தினம்!
* உழவன் எனும் உழைப்பாளி
நிலமற்றவர்களுக்கும் சேர்த்தே
வியர்வை சிந்தி சேற்றில் பாடுபட்டு
உண்ணச் சோறு போடுகிறான்!
* ஆசிரியர் எனும் உழைப்பாளி
கட்டுப்படாதவர்களுக்கும் சேர்த்தே
சிரத்தையோடு பாடங்களை கற்பித்து
சிந்தையில் அறிவை புகட்டுகிறான்!
* மருத்துவன் எனும் உழைப்பாளி
அக்கறையற்றவர்களுக்கும் சேர்த்தே
புதுப் புது நோய்களோடு போராடி
விலைமதிப்பற்ற உயிரை மீட்கிறான்!
* துப்புரவாளர் எனும் உழைப்பாளி
பொறுப்பற்றவர்களுக்கும் சேர்த்தே
இரவு, பகலாய் துாய்மை பணி செய்து
ஈடில்லா ஆரோக்கியம் காக்கிறான்!
* பத்திரிகையாளன் எனும் உழைப்பாளிபயந்தாங்கொள்ளிகளுக்கும் சேர்த்தே உயிரை பணயம் வைத்து
செய்தி சேகரித்து அளிக்கிறான்!
* ஓட்டுனர் எனும் உழைப்பாளி
உறங்குபவர்களுக்கும் சேர்த்தே
கண் விழித்து கவனமாய் வாகனம் இயக்கி
ஊர் கொண்டு போய் சேர்க்கிறான்!
* இன்னும் பலவகை உழைப்பாளிகள்
வீட்டுக்கும், நாட்டுக்கும் சேர்த்தே
அன்றாடம் ஓய்வின்றி உழைப்பதை
ஆண்டில் ஓர் நாளிலாவது மதித்து
நன்றியோடு போற்றுங்கள்!
- வெ.பாலமுருகன், திருச்சி.தொடர்புக்கு : 89735 19952