sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!

/

கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!

கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!

கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!


PUBLISHED ON : ஏப் 27, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 27, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 1 - உழைப்பாளர் தினம்!

* உழவன் எனும் உழைப்பாளி

நிலமற்றவர்களுக்கும் சேர்த்தே

வியர்வை சிந்தி சேற்றில் பாடுபட்டு

உண்ணச் சோறு போடுகிறான்!

* ஆசிரியர் எனும் உழைப்பாளி

கட்டுப்படாதவர்களுக்கும் சேர்த்தே

சிரத்தையோடு பாடங்களை கற்பித்து

சிந்தையில் அறிவை புகட்டுகிறான்!

* மருத்துவன் எனும் உழைப்பாளி

அக்கறையற்றவர்களுக்கும் சேர்த்தே

புதுப் புது நோய்களோடு போராடி

விலைமதிப்பற்ற உயிரை மீட்கிறான்!

* துப்புரவாளர் எனும் உழைப்பாளி

பொறுப்பற்றவர்களுக்கும் சேர்த்தே

இரவு, பகலாய் துாய்மை பணி செய்து

ஈடில்லா ஆரோக்கியம் காக்கிறான்!

* பத்திரிகையாளன் எனும் உழைப்பாளிபயந்தாங்கொள்ளிகளுக்கும் சேர்த்தே உயிரை பணயம் வைத்து

செய்தி சேகரித்து அளிக்கிறான்!

* ஓட்டுனர் எனும் உழைப்பாளி

உறங்குபவர்களுக்கும் சேர்த்தே

கண் விழித்து கவனமாய் வாகனம் இயக்கி

ஊர் கொண்டு போய் சேர்க்கிறான்!

* இன்னும் பலவகை உழைப்பாளிகள்

வீட்டுக்கும், நாட்டுக்கும் சேர்த்தே

அன்றாடம் ஓய்வின்றி உழைப்பதை

ஆண்டில் ஓர் நாளிலாவது மதித்து

நன்றியோடு போற்றுங்கள்!



- வெ.பாலமுருகன், திருச்சி.தொடர்புக்கு : 89735 19952






      Dinamalar
      Follow us