sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: பலத்தை காட்டிடுங்கள்!

கவிதைச்சோலை: பலத்தை காட்டிடுங்கள்!

கவிதைச்சோலை: பலத்தை காட்டிடுங்கள்!


PUBLISHED ON : டிச 21, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 21, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மூழ்கி விட்டாய் என்று

மற்றவர்கள் காழ்ப்புணர்வில்

கைதட்டி சிரித்திடும் போது முத்துக்களை அள்ளிக்கொண்டு

மேலேறி வந்து மார்தட்டுங்கள்!

* சறுக்கி விட்டாய் என்று

மற்றவர்கள் வெறுப்புணர்வில்

ஏளனம் செய்திடும் போது

தவறுகளை திருத்திக்கொண்டு

முன்னேறிச் சென்று வென்றிடுங்கள்!

* வீழ்ந்து விட்டாய் என்று

மற்றவர்கள் பகையுணர்வில்

ஏளனம் பேசிடும் போது

குதிரையென துள்ளியெழுந்து

இலக்கை விரைந்து எட்டுங்கள்!

* பயந்து விட்டாய் என்று

மற்றவர்கள் ஆணவ உணர்வில்

எகத்தாளம் கொள்ளும் போது

எதிர்பாராத அதிர்ச்சி தந்து

புத்திக்கூர்மையை நிரூபித்திடுங்கள்!

* அடங்கி விட்டாய் என்று

மற்றவர்கள் மமதை உணர்வில்

கொண்டாட்டம் நடத்திடும் போது

தீப்பந்தமென வெகுண்டெழுந்து

அநீதிகளை சுட்டுப் பொசுக்குங்கள்!

* முடங்கி விட்டாய் என்று

மற்றவர்கள் பகையுணர்வில்

பரிகசித்து அவமதித்திடும் போது

வீறுகொண்ட புயலாய் புறப்பட்டு

உங்கள் பலத்தை காட்டிடுங்கள்!



- விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.தொடர்புக்கு: 8248553326

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us