
ஒருகாலத்தில், உலகில் முன்னணியில் இருந்தது, 'பாட்டா' காலணி தயாரிப்பு நிறுவனம். கனடா நாட்டைச் சேர்ந்த, 'பாட்டா' நிறுவனத்தின் இந்திய தலைமையகம், கொல்கத்தாவில் இருக்கிறது. 75 ஆண்டுகளுக்கு முன் கேரளாவின், கோட்டயத்திலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. அப்போது, நெதர்லாந்தை சேர்ந்த, வாண்டோங்கு என்பவர் இங்கு உயர் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது தான் அவருக்கு மகள் தெரசா பிறந்தார்.
தன், ஐந்து வயது வரை கேரளாவில் தான் வளர்ந்தார், தெரசா தன் தந்தையின் பணி ஓய்வுக்கு பின், அனைவரும் தாய் நாடு திரும்பினர். இப்போது, 75 வயதாகும் தெரசாவுக்கு, தான் பிறந்த கோட்டயத்திலுள்ள வீட்டை காண வேண்டும் என்ற ஆசை ஏற்பட, உடனே கேரளாவில் உள்ள கோட்டயம் புறப்பட்டு வந்தார். ஆனால், அவர் பிறந்த வீடு, அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறியிருந்தது. அந்த இடத்தில் வேறு கட்டடங்கள் உருவாகியிருந்தாலும், தான் பிறந்த இடத்தை கண்டு மகிழ்ந்து, ஊர் திரும்பினார்.
- ஜோல்னாபையன்

