sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சமையல் டிப்ஸ்!

/

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : பிப் 16, 2025

Google News

PUBLISHED ON : பிப் 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தேன் குழலுக்கு அரைத்த மாவு மீந்து விட்டால், அதை கரைத்து, உப்பு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தோசை வார்க்க, ருசியுடன் இருக்கும்.

* பிரட் மீந்து விட்டதா, அதை மிக்சியில் பொடியாக்கி உப்பு, காரம், கரம் மசாலா, கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து பிசைந்து, 'கட்லெட்'டாக எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.

* தயிர் பச்சடி நீர்த்து போய் விட்டால், சிறிது நிலக்கடலை வறுத்து, நைசாக பொடித்து கலந்து விடுங்கள். இதனால், பச்சடி கெட்டியாவதோடு, சுவையும், சத்தும் கூடும்.

* வெண்டைக்காய் முற்றி விட்டால், சீரான துண்டுகளாக வெட்டி, வெயிலில் இரண்டு நாள் காய வைக்கவும். புளித்த மோரில், உப்பு, மிளகாய் துாள் போட்டு வெண்டைக்காயை இரண்டு நாள் ஊற விட்டு, காய வைத்து எடுத்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

— தொகுப்பு: எச்.சீதாலட்சுமி






      Dinamalar
      Follow us