
கோடை காலத்தில் முலாம் பழத்தை சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியாகும். அதன் விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து, ஜூசாக்கி பருக உடலுக்கு, தேவையான நீர்ச்சத்து கிடைக்கும்.
நுங்கை தோல் நீக்கி, பால், ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைத்து பருகினால், இதமாக இருக்கும்.
சப்போட்டா பழத்தை, விதை நீக்கி சிறிது தண்ணீர் மற்றும் பால் சேர்த்து ஜூசாக பருகினால், ரத்தம் விருத்தியாகும். மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராது.
மாம்பழத்துடன், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, மிக்சியில் அரைத்து பருகினால், உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.
பழ வகைகள் இருந்தால், அனைத்தையும் சிறு துண்டுகளாக்கி, சிறிதளவு சர்க்கரை, மில்க் மெய்டு கலந்து, பிரிட்ஜில் வைத்து, தேவையான போது கோடைகாலத்தில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையன நீர்ச்சத்து பெறலாம்.
குளிர்ச்சிமிக்க மூலிகை பொருள், புதினா. இது ரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இதிலுள்ள மென்தால் உடலை குளிர்ச்சியாக உணர வைக்கும்.
கோடைகாலத்தில், தினமும் தயிர் பருகி வருவதால், அதில் உள்ள இயற்கையான சத்துக்கள், பல்வேறு நோய்கள் மற்றும் செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும்.
வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு முகம் கறுத்துப் போய்விடும். இவர்கள் பன்னீரை பஞ்சில் நனைத்து, முகத்தில் ஒற்றிக்கொள்வதன் மூலம், வெப்பத்தை தணித்துக் கொள்ளலாம்.