sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை - வெற்றிச் சிகரத்தில்...

/

கவிதைச்சோலை - வெற்றிச் சிகரத்தில்...

கவிதைச்சோலை - வெற்றிச் சிகரத்தில்...

கவிதைச்சோலை - வெற்றிச் சிகரத்தில்...


PUBLISHED ON : ஜூன் 02, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 02, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பேசுவதற்கான

பல கோடி வார்த்தைகள்

உங்கள் உள்ளத்தில் இருக்கின்றன...

ஆனால், அவற்றை

தனக்குத் தானே பேசிக் கொண்டால்

பார்ப்போர் சிரிப்பர் என்பதால்

பேசிட விரும்பும்

பிடித்தமான முகங்களுக்காக

காத்திருந்து பேசுவதே சரி!

* செய்து முடிப்பதற்கான

பல்லாயிரம் செயல்கள்

உங்கள் மனதில் இருக்கின்றன...

ஆனால், அவற்றை

தனக்காக மட்டுமே செய்து கொண்டால்

உலகத்தார் சாடுவர் என்பதால்

செய்திட எண்ணும்

ஒவ்வொரு செயலையும்

பொது நல உணர்வு கலந்து

செய்து கொண்டிருப்பதே சரி!

* திறந்த மனதோடு மட்டுமே

நம் வாழ்க்கை முழுவதும்

நாம் பயணப்பட வேண்டும்...

அவ்வாறு பயணப்படத் தயங்கினால்

திரும்பிய திசைகளில் எல்லாம்

மூடிய கதவுகளை மட்டுமே

நாம் பார்த்து திகைக்க வேண்டிய

பரிதாப நிலைமை ஏற்பட்டு விடும்!

* தனக்கான துறையை தேர்வதில்

உங்களுக்குள்ள அகலாத

ஆர்வம் தான் அடிப்படை...

ஆனால், ஆர்வம் இருக்கிறது

என்ற ஒரு காரணத்தாலேயே

யாருக்கும் திறமை வந்து விடாது!

* ஆர்வம் என்பதுதினமும் ஆடை மாற்றுவதைப் போல

மாறிக்கொண்டே இருக்கும்...

ஆனால், திறமை அப்படி அல்ல;

விடாமல் தொடர்ந்து

பட்டை தீட்டிக் கொண்டே இருந்தால்

வெற்றி சிகரத்தில் ஏற்றி வைக்கும்!

— எஸ்.வி.ராஜசேகரன், மதுரை.






      Dinamalar
      Follow us