sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 14, 2026 ,மார்கழி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை - வெற்றிச் சிகரத்தில்...

/

கவிதைச்சோலை - வெற்றிச் சிகரத்தில்...

கவிதைச்சோலை - வெற்றிச் சிகரத்தில்...

கவிதைச்சோலை - வெற்றிச் சிகரத்தில்...


PUBLISHED ON : ஜூன் 02, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 02, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பேசுவதற்கான

பல கோடி வார்த்தைகள்

உங்கள் உள்ளத்தில் இருக்கின்றன...

ஆனால், அவற்றை

தனக்குத் தானே பேசிக் கொண்டால்

பார்ப்போர் சிரிப்பர் என்பதால்

பேசிட விரும்பும்

பிடித்தமான முகங்களுக்காக

காத்திருந்து பேசுவதே சரி!

* செய்து முடிப்பதற்கான

பல்லாயிரம் செயல்கள்

உங்கள் மனதில் இருக்கின்றன...

ஆனால், அவற்றை

தனக்காக மட்டுமே செய்து கொண்டால்

உலகத்தார் சாடுவர் என்பதால்

செய்திட எண்ணும்

ஒவ்வொரு செயலையும்

பொது நல உணர்வு கலந்து

செய்து கொண்டிருப்பதே சரி!

* திறந்த மனதோடு மட்டுமே

நம் வாழ்க்கை முழுவதும்

நாம் பயணப்பட வேண்டும்...

அவ்வாறு பயணப்படத் தயங்கினால்

திரும்பிய திசைகளில் எல்லாம்

மூடிய கதவுகளை மட்டுமே

நாம் பார்த்து திகைக்க வேண்டிய

பரிதாப நிலைமை ஏற்பட்டு விடும்!

* தனக்கான துறையை தேர்வதில்

உங்களுக்குள்ள அகலாத

ஆர்வம் தான் அடிப்படை...

ஆனால், ஆர்வம் இருக்கிறது

என்ற ஒரு காரணத்தாலேயே

யாருக்கும் திறமை வந்து விடாது!

* ஆர்வம் என்பதுதினமும் ஆடை மாற்றுவதைப் போல

மாறிக்கொண்டே இருக்கும்...

ஆனால், திறமை அப்படி அல்ல;

விடாமல் தொடர்ந்து

பட்டை தீட்டிக் கொண்டே இருந்தால்

வெற்றி சிகரத்தில் ஏற்றி வைக்கும்!

— எஸ்.வி.ராஜசேகரன், மதுரை.






      Dinamalar
      Follow us