sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மன நிம்மதி வேண்டுமா?

/

மன நிம்மதி வேண்டுமா?

மன நிம்மதி வேண்டுமா?

மன நிம்மதி வேண்டுமா?


PUBLISHED ON : ஜூன் 20, 2021

Google News

PUBLISHED ON : ஜூன் 20, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூன் 21, யோகா தினம்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா பயிற்சி, ஒருவருடைய உடலையும், மனதையும் ஒருநிலைப் படுத்துவதோடு, உடல் வலிமை பெறுவதற்கும் பெரிதும் உதவுகிறது.

யோகா பயிற்சி செய்வதற்கு முன், கவனிக்க வேண்டியவை:

* யோகா பயிற்சி மேற்கொள்ளும் இடங்கள், நல்ல காற்றோட்டத்துடன், சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்

* இப்பயிற்சிகளை செய்வதற்கு முன், காலை கடன்களை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்

* 'யோகா மேட்'டில் அமர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், சுத்தமான விரிப்புகள், ஜமுக்காளம் போன்றவற்றை தரையில் விரித்து, அதன் மேல் பயிற்சிகளை செய்ய வேண்டும்

* தளர்வான மேலாடைகளை அணிந்து கொண்டால், பயிற்சிகளை செய்வதற்கு வசதியாக இருக்கும். மேலும், உள்ளாடைகள் சரியான அளவு இறுக்கத்துடன் இருப்பது அவசியம்

* இப்பயிற்சிகளை வேகமாக செய்யக்கூடாது. உடல் சோர்வாக இருக்கும்போது, யோகா செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்

*மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில், பெண்கள் பயிற்சிகளை செய்வதற்கு முன், யோகா மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு, செய்வது நல்லது.

பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியவை:

* யோகா பயிற்சி முடித்து, அரை மணி நேரத்துக்கு பிறகு தான் குளிக்க வேண்டும்

* பயிற்சி முடித்த அரை மணி நேரத்திற்கு பிறகே உணவு உண்பதும், குடிநீர் அருந்துவதும் நல்லது.

யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

* ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், சுவாச கோளாறு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களுக்கு தீர்வு காண உதவுகிறது

* மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதற்றம் குறைக்கிறது

* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் ஹார்மோன் பிரச்னைகளுக்கு தீர்வு காண, துணை புரிகிறது.

தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்






      Dinamalar
      Follow us