sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி!

நம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி!

நம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி!


PUBLISHED ON : நவ 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எரிப்பு குணத்தை உடையது, இஞ்சி. கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும்; பசியைத் துாண்டும்; உமிழ்நீரைப் பெருக்கும்; உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலிலுள்ள வாயுவை நீக்கும்; காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.

முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், மூழ்குமாறு, 48 நாட்கள் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பின், தினமும் இரண்டு துண்டு வீதம், உணவிற்கு முன், மென்று சாப்பிட்டு வர பசியின்மை, வயிற்று பொருமல் தீரும். நரை, தோல் சுருக்கம், மூப்பு அணுகாது. தேகம் அழகு பெறும். மனம் பலப்படும். இளமை நிலைத்திருக்கும்.

இஞ்சிச் சாறை, தொப்புளை சுற்றிப் பற்றுப்போட்டால், குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் நீங்கும்.

ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு, தினமும் மூன்று வேளை குடித்தால், வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாகும்.

ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளை, ஏழு நாட்களுக்குப் பருகினால், சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.

இஞ்சி மற்றும் வெங்காய சாறு, தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து, சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால், வாந்தி கட்டுப்படும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து, ஒரு வாரம், காலையில் ஒரு தேக்கரண்டி வீதம் குடித்துவர, நீரிழிவு குறையும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய் குணமாவதோடு, உடம்பும் இளைக்கும்.

மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி நீங்க, இஞ்சியை துவையல் மற்றும் பச்சடி செய்து சாப்பிடலாம்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிடுவதால், பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் போன்றவை நீங்கும். அதேவேளை, சுறுசுறுப்பும் ஏற்படும்.

காலையில், இஞ்சி சாறில் உப்பு கலந்து, மூன்று நாட்கள் பருகுவதன் மூலம், பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல் தீரும்; இளமையான தோற்றத்தையும் தரும்.

பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து, காலை, மாலை என, இரண்டு நாட்கள் சாப்பிட, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில், ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி, வெந்நீர் குடித்து வர, தொந்தி கரையும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு திறன் கூடும்.

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு, தலா ஒரு தேக்கரண்டி கலந்து, ஒருவேளை சாப்பிட்டு வர, ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

நன்றாக காயவைத்துப் பதப்படுத்தப்பட்ட இஞ்சியின் கிழங்குகளே, சுக்கு எனப்படுபவை. அரை தேக்கரண்டி சுக்கு பொடியை, சிறிது தண்ணீர் கலந்து

சூடாக்கி, பசை போல செய்து, வலி இருக்கும் இடத்தில் பரவலாகத் தடவினால், தலைவலி தீரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us