PUBLISHED ON : மார் 03, 2019

பெண்களை பற்றி, 'வில்லியம் கோல்டிங்' எனும் ஆங்கில நாவலாசிரியர் சொல்கிறார்:
பெண்கள், தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே, நான் நினைக்கிறேன். ஆண்களுக்கு நிகரானவர் இல்லை, பெண்கள். மாறாக, ஆண்களை விட, பன்மடங்கு உயர்ந்தவர்கள்.
ஒரு பெண்ணிடம், நீ எதையாவது கொடுத்தால், அவள், அதை பெரிதாக்கி, சிறப்பு செய்து விடுவாள்.
உன் உயிரணுவை கொடுத்தால், அவள், உனக்கு ஒரு குழந்தையை தருவாள்; ஒரு வீட்டை கொடுத்தால், அதை அவள் குடும்பமாக மாற்றிக் காட்டுவாள்; நீ மளிகை பொருட்களை கொடுத்தால், அவள் விருந்து படைப்பாள்; புன்னகையை அளித்தால், அவள், தன் இதயத்தை, உனக்கு கொடுத்து விடுவாள்.
கொடுப்பது எதுவாயினும், அதை பல மடங்கு பெரிதாக்குவது, பெண்ணின் குணம். எனவே, அவளுக்கு, சிறிய அளவில் நீ ஏதாவது தொல்லை கொடுத்தாயானால், உடனே, அதை டன் கணக்கில், உனக்கு திருப்பி கொடுப்பாள் என்பதையும் புரிந்து கொள்.
— ஜோல்னாபையன்.