PUBLISHED ON : ஜூலை 09, 2017

அ நிறம் | அளவு
பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர முயற்சியின் காரணமாக, தற்போது, உலக நாடுகள் முழுவதும் பிரபலமாகி விட்டது, யோகா.
அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், இவ்விஷயத்தில், சற்று மாற்றி யோசித்து, செமையாக கல்லா கட்டி வருகிறார்.
தன் பண்ணையில், யோகா முகாம் அமைத்து, பெண்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். அத்துடன், பண்ணையில், ஏராளமான ஆடுகளை வளர்த்து வரும் இவர், அவற்றிற்கு சிறப்பு பயிற்சி கொடுத்துள்ளார். இவை, யோகா செய்வோரின் முதுகு, தோள் மற்றும் தலை மீது, ஏறி விளையாடுகின்றன.
இதுகுறித்து, யோகா செய்யும் பெண்கள் கூறும் போது, 'யோகா செய்யும் போது, ஆடுகள் எங்கள் மீது, ஏறி விளையாடுகின்றன; அந்நேரத்தில், மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து, எங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது...' என்கின்றனர்.
— ஜோல்னாபையன்.
