
இளநீரில், எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால், வயிற்று கடுப்பு நிற்பதுடன், உடல் சூடு குறையும். மேலும், இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அரைத்து சாப்பிட்டாலும், உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று கடுப்பு தீரும்.
* குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி பேதிக்கு, இளநீர் சிறந்த மருந்து.
* இளநீரின் வாய்ப்பகுதியில் துளையிட்டு, ஒரு கரண்டி சீரகத்தை உள்ளே போட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, அதிகாலையில் பருகி வர, உடல் உஷ்ணம் மற்றும் வயிற்று வலி தீரும்.
* இளநீருடன் நுங்கை கலந்து உடலில் தேய்த்தால், சொறி, சிரங்கு மற்றும் வேர்க்குரு பிரச்னை ஏற்படாது.
* இளநீருடன் தேன் கலந்து சாப்பிட, தாது பலம் ஏற்படும்.
* இளநீரை தொடர்ந்து சாப்பிட, வயிற்றுபுண் ஆறும்.
* சிறிதளவு வால்மிளகை இளநீருடன் அரைத்து, நெற்றிப் பொட்டில் பூசிட, வெப்ப தலைவலி தீரும்.
* இளநீரில் பாசிப்பயறு, வெந்தயத்தை ஊற வைத்து, உடலில் தேய்த்து குளிக்க சொறி, வியர்வை நாற்றம் மறையும்.
* இளநீரில் மல்லித்தூள் அல்லது ஏலத்தூள் கலந்து சாப்பிட, வாந்தி நிற்கும்.
* இளநீரில் தர்பூசணி பழத்துண்டுகளையோ அல்லது வெள்ளரி பழத் துண்டுகளையோ கலந்து சாப்பிட, உடல் உஷ்ணம் தணியும்.

