sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

உளவுத் துறையில் 1300 பணி

/

உளவுத் துறையில் 1300 பணி

உளவுத் துறையில் 1300 பணி

உளவுத் துறையில் 1300 பணி


PUBLISHED ON : ஆக 15, 2017

Google News

PUBLISHED ON : ஆக 15, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத் துறை இன்டலிஜென்ஸ் பீரோ (ஐ.பி.,) என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. இந்த அமைப்பில் காலியாக இருக்கும் மத்திய துணை உளவு அதிகாரி ( அசிஸ்டென்ட் சென்ட்ரல் இண்டலிஜென்ஸ் ஆபிசர்) பிரிவிலான 1300 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடும் உள்ளது.



வயது :
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாக தேவைப்படும்.



தேர்ச்சி முறை :
உளவு அதிகாரி பதவிக்கான தேர்ச்சி முறை டயர் 1 மற்றும் டயர் 2 என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும். முதல் நிலையில் அப்ஜெக்டிவ் வகையிலான தேர்வு ஜெனரல் அவேர்னஸ், குவாண்டிடேடிவ்

ஆப்டியூட், லாஜிக்கல்/அனலிடிகல் எபிலிடி, இங்கிலீஷ் லாங்குவேஜ் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும். இரண்டாவது பிரிவில் டெஸ்கிரிப்டிவ் வகைத் தேர்வில் கட்டுரை, சுருக்கி எழுதுதல் காம்ப்ரிஹெசன் ஆகிய பகுதிகள் இருக்கும்.

தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையிலேயே இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

டைசி நாள் : 2017 செப்., 2.

விபரங்களுக்கு : www.mha.nic.in






      Dinamalar
      Follow us