sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

வங்கிகளில் 3,562 அதிகாரி பணியிடங்கள்

/

வங்கிகளில் 3,562 அதிகாரி பணியிடங்கள்

வங்கிகளில் 3,562 அதிகாரி பணியிடங்கள்

வங்கிகளில் 3,562 அதிகாரி பணியிடங்கள்


PUBLISHED ON : ஆக 22, 2017

Google News

PUBLISHED ON : ஆக 22, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக, வங்கித்துறை மாறியுள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளது. வங்கி பணிக்கு செல்வது தற்போது எளிதான ஒன்றாகி விட்டது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது. இது 2011ம் ஆண்டு முதல் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 2017 - 18ம் ஆண்டுக்கான ஐ.பி.பி.எஸ்., புரபேஷனரி ஆபிசர்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு

உள்ளது.

காலியிடங்கள்: 20 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 3,562 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.



யார் விண்ணப்பிக்கலாம்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாக பள்ளி/கல்லுாரிகளில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ

அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.



வயது:
2017௭ ஆக.1ன் படி 20 - 30வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 600 ரூபாய் (எஸ்சி/எஸ்டி 100 ரூபாய்). இதனை ஆன்லைன் / வங்கி சலான் ஆகிய 2 வழிகளில் செலுத்தலாம். ஆக., 16 முதல் செப்., 5 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையிலான பிரிலிமினரி மற்றும் மெயின் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். பிரிலிமினரி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப்

பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.

பிரிலிமினரி தேர்வு அக்., 7, 8 மற்றும் 14, 15 தேதிகளில் நடைபெறும். மெயின்

தேர்வு நவ., 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 2017, செப்.5,

விரிவான விபரங்களுக்கு http://www.ibps.in/






      Dinamalar
      Follow us