sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள் 7,883

/

வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள் 7,883

வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள் 7,883

வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள் 7,883


PUBLISHED ON : செப் 12, 2017

Google News

PUBLISHED ON : செப் 12, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளைஞர்கள் பலருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளில், கடந்த 6 ஆண்டுகளாக முன்னணியில் வங்கித்துறை திகழ்கிறது. இத்துறையில் சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் அரசு வேலைக்கு தேர்ந் தெடுக்கப்படுகின்றனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளது. மத்திய அரசும் வங்கிகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கிறது. வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection) தேர்வாணையம் ஏற்றுள்ளது. இது 2011ம் ஆண்டு முதல் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 5ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 2018 - 19ம் ஆண்டுக்கான ஐ.பி.பி.எஸ்., 'கிளார்க்' பதவிக்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் : இந்தியாவில் உள்ள 19 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 7,883 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 1,277 காலியிடங்கள் உள்ளன.



கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாக பள்ளி அல்லது கல்லுாரிகளில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பாக டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.



வயது தகுதி :
விண்ணப்பிப்பவர்கள் 2017 செப்., 1 அன்று 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை உள்ளது.



தேர்ச்சி முறை :
முதலில் பிரிலிமினரி ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இதில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப் பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். பிரிலிமினரி தேர்வு 100 மதிப்பெண்ணுக்கும், மெயின் தேர்வு 200 மதிப்பெண்ணுக்கும் நடைபெறும்.



விண்ணப்பிக்கும் முறை:
இத்தேர்வுக்கு www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 600 ரூபாய் (எஸ்சி/எஸ்டி 100 ரூபாய்). இதனை ஆன்லைன் / வங்கி சலான் ஆகிய 2 வழிகளில் செலுத்தலாம். செப்., 12 முதல் அக்., 3 வரை விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு : www.ibps.in

விண்ணப்பிக்கும் தேதி : 2017 செப்., 12 - அக்., 3 வரை



பிரிலிமினரி தேர்வு :
2017 டிச., 2,3 மற்றும் டிச., 9,10



மெயின் தேர்வு:
2018 ஜன., 21






      Dinamalar
      Follow us