PUBLISHED ON : ஏப் 11, 2017

வேலூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள 63 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை இ-கோர்ட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
பிரிவுகள்: கம்ப்யூட்டர் ஆபரேட்டரில் 5, டைப்பிஸ்ட் பிரிவில் 13 மற்றும் இதர இடங்கள் 45
வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் பட்டப் படிப்பு, அல்லது பி.ஏ., அல்லது பி.காம்., படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங்கில் ஜூனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட் புகைப்படம், ரூ.25/- சுயவிலாசமிட்ட கவருடன் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தில் அறிந்து கவனமாக விண்ணப்பிக்கவும்.
கடைசி நாள்: 2017 ஏப்., 20
விபரங்களுக்கு: http://ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202017_3.pdf

