PUBLISHED ON : ஏப் 22, 2026

அ நிறம் | அளவு
அரைக்கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, இ.பூபதி கூறியதாவது:
பலவித கீரைகள் சாகுபடி செய்து வருகிறேன்; அந்த வரிசையில், இயற்கை உரங்களை பயன்படுத்தி பாத்தி முறையில் அரைக்கீரை சாகுபடி செய்துள்ளேன்.
கீரை விதைக்கும் முன், எள் புண்ணாக்கு அடியுரமாக போட்டு, பாத்தி கட்டி அரைக்கீரை விதைத்துள்ளேன். ஒவ்வொரு முறையும், கீரை அறுவடை செய்த பின், இயற்கை உரங்களை போட்டு அறுவடை செய்து வருகிறேன்.
கீரைகளில், இலை பூச்சிகளை விரட்டுவதற்கு சூடோமோனாஸ் உள்ளிட்ட உயிர் உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகிறேன். நஞ்சில்லாத விளைப்பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: இ.பூபதி,
96299 81459.
