தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/03. நவீன தொழில்நுட்பம்

03. நவீன தொழில்நுட்பம்

03. நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஜூன் 30, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2010


Follow on Google
அ நிறம் | அளவு

தென்னையில் ஊடுபயிராக அசோலா 



தழைச்சத்தை சேர்க்கும் நீர்பச்சை பாசியான அசோலா பொதுவாக குளம், குட்டை, கால்வாய், நெல்வயல்களில் மிதக்கின்ற நீர் நுண்தாவரம். பச்சை நுண்ம குச்சியான அனபீனா அசோலாவை தன்னிடம் ஒருமித்த இணைவாக அதனின் மேற்புற இலை இடுக்குகளில் கொண்டு உள்ளது. வளிமண்டல தழைச்சத்தை பச்சை நுண்ம குச்சி, அசோலாவில் சேர்த்துக்கொள்கிறது. அசோலா நீர் நுண்தாவரம் 0.2-0.3 சதம் தழைச்சத்தைக் கொண்டுள்ளது. (ஈர எடை அடிப்படையில்) எனவே அதனின் இதழ் இலைகள் செழிப்பான பசுந்தாள் உரமாக உள்ளது.

உற்பத்தி பெருக்கம்: அசோலாவானது வருடம் முழுவதும் வளரும் தன்மை உடையது. தென்னை மரங்களுக்கிடையே குழிகள் வெட்டி ஊடுபயிராக அசோலா வெற்றிகரமாக வளர்க்கப்படுகிறது. தென்னை நீலபச்சை பாசிக்கு தேவையான நிழலைத் தருகிறது. தென்னையின் அடிப்பகுதியிலிருந்து 5 அடி தள்ளி 6 அடி து 36 அடி து 3 அடி அளவுள்ள குழிகள் எடுக்க வேண்டும். இதுபோன்று 2 குழிகள் 2 அடி இடைவெளியில் வெட்டவேண்டும். ஒரு கிலோ புதிய பசுஞ்சாணம் குழியில் இட்டு நீர்விட வேண்டும். மேலும் நீர் அளவை 0.5 அடியாக வளர்க்கும் காலம் முழுவதும் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். சூப்பர் பாஸ்பேட் கார்போபியூரான் 3 சதம் குருணை 15 கிராம் அடியுரமாக குழியில் இட்டு நீர்விட்டு கிளறி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு குழிக்கு புதிய அசோலா இலை இதழ்கள் 100 கிராம் வீதம் வளர் இடுபொருளாக இடவேண்டும். பிறகு அசோலா வளர்ந்து உற்பத்தியாகும் புதிய உயிர்பெருக்க நீலபச்சை பாசியானது இட்ட 15 நாட்களுக்குப் பின் நீர்ப்பரப்பை மூடிவிடும். உயிர்பெருக்கமடைந்த நிலையில் அசோலாவை அறுவடை செய்து நெல்வயல்களுக்கு இடலாம். ஒவ்வொரு குழியிலும் 3 கிலோ அசோலாவை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் போது சிறு அளவிலான அசோலாவை (100 கிராம்) குழியில் அப்படியே விட்டு அடுத்த வளர்ப்பிற்கு வளர் இடுபொருளாக பயன்பட வழிவகுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட சூப்பர்பாஸ்பேட் மற்றும் கார்போ பியூரான் 3 சதக்குருணை திரும்பவும் அடுத்தடுத்த அசோலா வளர்ப்பிற்கு கொடுக்கப்பட வேண்டும். இம்முறையில் அசோலா வளர்ப்பதால் அருகாமையிலுள்ள தென்னையின் வளர்ச்சி, மகசூல் பாதிப்புஏற்படுவதில்லை. எனவே விவசாயிகள் அசோலா மற்றும் நீலபச்சை பாசியை மலிவாக உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டிற்கும் பிற விவசாயிகளுக்கும் விற்று பயன்பெறலாம். (தகவல்: த.அருள்ராஜன், கா.ராஜப்பன், சி.நடராஜன், தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்-614 906)



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us