sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சீரான வருமானம் வழங்கும் கொத்தவரை

/

சீரான வருமானம் வழங்கும் கொத்தவரை

சீரான வருமானம் வழங்கும் கொத்தவரை

சீரான வருமானம் வழங்கும் கொத்தவரை


PUBLISHED ON : ஏப் 27, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 27, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வறட்சி பூமியிலும் இருக்கும் நீரை கொண்டு கொத்தவரை சாகுபடி செய்து அதிக லாபத்துடன் சாதனை படைத்து வருகிறார் விருதுநகர் அருகே சின்ன பேராலியை சேர்ந்த விவசாயி ஜோதிபாசு.

பத்தாவது படித்து முடித்தவுடன் தனது குடும்பத்தினருடன் விவசாயத்தில் ஈடுபட்டு, தற்போது முழு நேர விவசாயியாக, கொத்தவரையை சாகுபடி செய்து அதிக லாபம் பெற்று சாதித்து வருகிறார்.

அவர் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களுக்கு முன் 15 சென்ட் நிலத்தில் விதைத்தேன். 30 நாளில் காய்கள் வந்தன. மூன்று நாட்களுக்கு ஒரு முறை 60 கிலோ காய்கள் கிடைக்கின்றன. கடந்த மாதம் வரை கிலோ ரூ.40 வரை விற்றதால் நல்ல லாபம் கிடைத்தது. தற்போது சந்தையில் போதிய விலை கிடைக்காமல் இருந்தாலும், வருமானம் சீராகவே உள்ளது.

இன்னும் 30 நாட்கள் வரை காய்கள் கிடைக்கும் என்பதால், மற்ற விவசாயத்தை விட இதில் லாபம் அதிகமாக உள்ளது.

தற்போது கோடை காலமாக இருப்பதால் ஆழ்குழாயில் தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நீர்மட்டம் கொஞ்சம் அதிகரித்தால் அனைத்து பரப்பிலும் கொத்தவரையை பயிர் செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன், என்றார்.

- ஆர்.வி.ராமநாதன், விருதுநகர்.






      Dinamalar
      Follow us