sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மாடுகள் சினையாகி உள்ளதா

/

மாடுகள் சினையாகி உள்ளதா

மாடுகள் சினையாகி உள்ளதா

மாடுகள் சினையாகி உள்ளதா


PUBLISHED ON : ஏப் 03, 2019

Google News

PUBLISHED ON : ஏப் 03, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் மாடு சினை பிடித்துள்ளதா, என அறிய கால்நடை மருத்துவமனையை அணுகலாம். அதற்கு பதிலாக வேறு வழியில் அறிய டாக்டர் வீணா என்பவர் கர்நாடக மாநிலத்தில் ஆராய்ச்சி செய்தார். எகிப்து நாட்டின் பிரமிடுகளில் ஓலைச்சுவடி இருக்கும். அதில் பெண்கள் கருவுற்று உள்ளார்களா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது, என எழுதியிருந்ததை வீணா கண்டார். பெண்ணின் சிறு நீரை பார்லி அல்லது கோதுமை விதைகளில் தெளித்து முளைக்கா விட்டால் கருப்பிடிக்கவில்லை என அர்த்தம். நாற்று நன்கு வளர்ந்தால் கருவுற்றிருக்கிறார், என பொருள். நன்கு உயரமாக நாற்று (பார்லி) வளர்ந்தால் பெண் குழந்தை எனவும், கோதுமை நாற்று நன்கு வளர்ந்தால் ஆண் குழந்தை எனவும் கண்டுபிடிக்கலாம்.

இதே முறையை பயன்படுத்தி மாடுகள் சினையாகி உள்ளதா, என ஆராய முடிவு செய்தார். சினைக்கு போட்ட (பசு, எருமை, ஆடு) 25 நாட்கள் கழித்து கண்ணாடி குவளையில் உள்ள கோதுமை, சோளம், பாசிப்பயறு ஆகியவற்றில் எதாவது விதையில் கோமியத்தில் 4 பங்கு நீர் கலந்து, ஊற்றி முளைக்க வைக்க வேண்டும். வேறு குவளையில் சாதாரண தண்ணீர் ஊற்றி முளைக்க வைத்தால், முளைப்புத்திறன், வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கோமியம் கலந்து ஊற்றிய நாற்றின் வளர்ச்சி குறைவாக இருக்கும். இதை 20 சினை மாடுகளுக்கு சோதித்து 100 சதவீதம் உறுதி செய்தார்.

தொடர்புக்கு 95662 53929.

- எம்.ஞானசேகர்

விவசாய ஆலோசகர், சென்னை.







      Dinamalar
      Follow us