/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக வருவாய்க்கு பாலுார் - 1 ரக சிறுகீரை
/
அதிக வருவாய்க்கு பாலுார் - 1 ரக சிறுகீரை
PUBLISHED ON : ஜன 01, 2025

பாலுார் - 1 ரக சிறுகீரை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம்,திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் பிரீத்தி கூறிய தாவது:
தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில், கோவை - 1, கோவை - 2, கோவை - 5 முளைக்கீரை மற்றும் தண்டு கீரை மற்றும் கோவை - 3, கோவை - 4 அரைக்கீரை ஆகிய கீரை வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.
பி.எல்.ஆர்., - 1 எனஅழைக்கப்படும் பாலுார் - 1 ரக சிறுகீரை சாகுபடி செய்ய லாம். இதற்கு, களிமண், மணல் கலந்த நிலத்தில் சாகுபடி செய்யலாம். 1 ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது.
அதற்கேற்ப, நிலத்தில் தொழு உரம் மற்றும் இயற்கை உரங்களை போட்டு மண்ணை பதப்படுத்தி விதைக்கலாம். இதை, 20 நாட்களுக்குப் பின் அறுவடை செய்யலாம்.
10 சென்ட் நிலத்தில், 10,000 ரூபாய் வரையில் மகசூல் பெறலாம். 1 ஏக்கர் சாகுபடி செய்தால், மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: பிரீத்தி,
இணைப்பேராசிரியர்,
திரூர் நெல் ஆராய்ச்சி நிலையம்,
திருவள்ளூர்.