sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கிணற்றுக்குள் விடும் போர்வெல் தண்ணீர்

/

கிணற்றுக்குள் விடும் போர்வெல் தண்ணீர்

கிணற்றுக்குள் விடும் போர்வெல் தண்ணீர்

கிணற்றுக்குள் விடும் போர்வெல் தண்ணீர்


PUBLISHED ON : ஆக 07, 2019

Google News

PUBLISHED ON : ஆக 07, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீர்ப்பாசன வசதியுடைய பல விவசாயிகள் தம் நிலத்தில் அல்லது மூன்று போர்வெல்கள் வைத்திருப்பவர்கள் தன்னிடம் பயன்படுத்தாத பழைய கிணறு இருந்தால், அதை ஒரு தண்ணீர் சேமிக்கும் தொட்டி என்று கற்பனை செய்து தண்ணீரை, அதுவும் ஒரு நாள் முழுவதும் இலவச மின்சாரம் மூலம் கிணற்றுக்குள் தண்ணீரை வெகு தொலைவில் இருந்து கொண்டு வருவதும், அதில் பெருமையாக எனக்கு தொட்டி கட்டும் செலவு மிச்சம் என்பதும், ஒரு கேலிக்கூத்தான செய்திதான்.

உண்மை நிலவரம் என்னவென்றால் நிலத்தின் மேற்பரப்பில் எவ்வாறு ஆறு ஓடுகிறதோ அதேபோல்தான் பூமிக்கு அடியில் பல 100 அடிகளுக்கும் கீழே கூட நீரோட்டம் காணப்படுகிறது.

இதில் நாம் போர்வெல் எனும் ஆழ்துளை குழாய் செலுத்தி தண்ணீரை எடுக்கிறோம். புத்திசாலித்தனமாக நிலத்துக்கு அடியில் சிமென்ட் போட்டு பூசி சமதளமாக கிணற்றை தயார் செய்திருந்தால் நல்லது. அது தொட்டி போல் பயன்படும். நமக்கு கிணற்று தண்ணீரும் வேண்டும். 'சைடு போர்' எனும் கிணற்றுக்குள் நாம் போட்ட 'போர்' மூலம் வரும் சொற்ப தண்ணீரும் வேண்டும், என்று நினைத்து தரையை சிமென்ட் மூலம் பூசாமல் வெறுமனே விட்டிருந்தால் அது நிச்சயம் நிறைய தண்ணீரை அதள பாதாள நீர்ப்பாதைக்கு அனுப்பிவிடும்.

இலவச மின்சாரம் என்பதால் விடாமல் ஓட விடும் போது மோட்டார் பம்பு செட் விரைவில் பழுதாகி பண விரயமாகும். கிணற்றுக்குள் விடப்படும் தண்ணீர் அங்கேயே தேங்கி நிற்க கல் அல்ல. அது திரவம். வழிந்தோடுவது அதன் குணம். தண்ணீரை சேமிக்க தரையில் சிமென்ட் காங்கிரீட் பூச்சுடன் கூடிய தொட்டிகளே ஏற்றது.

இதன் மூலம் தண்ணீர் எடுத்து சொட்டு நீர் பாசன முறையில் விவசாயம் செய்தால் விவசாயிகளுக்கு பெருமளவு செலவு மிச்சமாகும்.

- டாக்டர். பா.இளங்கோவன்

வேளாண் துணை இயக்குனர், தேனி

98420 07125.







      Dinamalar
      Follow us